நோயாளியுடன் பயணித்த அம்புலன்ஸ் வண்டியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I
நோயாளியுடன் பயணித்த அம்புலன்ஸ் வண்டியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் பலி..

நோயாளியுடன் வைத்தியசாலை நோக்கி பயணித்த அம்புலன்ஸ் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் ஏ 9 வீதியில் மாங்குளம் - செல்வபுரம் பகுதியில் இஇடம்பெற்றுள்ளது. 

மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. 

தனது செய்கை நிலத்தை பார்வையிட்டு வீதியின் மறுபுறத்திற்கு குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது நோயாளியுடன் வேகமாக பயணித்த நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது.

நோயாளர் காவு வண்டியின் சமிக்கைகளை அவதானிக்காது சடுதியாக வீதியை கடக்க முற்பட்டுள்ளமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்த மக்கள் தெரிவித்தனர். நோயாளர் காவு வண்டியில் பயணித்த நோயாளர் 

மற்றும் வைத்தியர் ஆகியோர் இன்னுமொரு நோயாளர் காவு வண்டியில் மாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர சேவை ஊடாக 

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பார ஊர்திகள் சங்க முகாமையாளராக சேவையாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு