தமிழரசு கட்சியின் முடிவு கொடுமையான அதிர்ச்சியளிக்கிறது.

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் முடிவு கொடுமையான அதிர்ச்சியளிக்கிறது.

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசுக் க ட்சியுடன் இணங்கி செயற்படுவதில்லை எ ன ரெலோ அமைப்பு தீர்மானித்துள்ளது. இ ந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் த லைவர் ரெலோ அமைப்புடன் தொலைபே சியில் உரையாடியுள்ளார்.

இது குறித்து ரெலோ அமைப்பின் செயலா ளர் என்.சிறீகாந்த ஊடகங்களுக்கு தகவல் தருகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் எங்களை தொ லைபேசி ஊடாக பேசினார். நேற்றய நிகழ்வுகள் தொடர்பாக கேட்டார். தமிழரசு கட்சியின் நிலைப்பாடு கொடுமையான அதிர்ச்சியாக இருந்தது என அவ ருக்கு கூறியுள்ளேன்.

நாங்கள் பேசவேண்டும் ஒற்றுமையாக போகவேண்டும் என கூறினார். சந்திக்க தயார் என கூறினோம். சந்திக்க தயார் ஆனால் தமிழரசு கட்சி பொறுப்போடு சிந்திக்க வேண்டும். எங்கள் முடிவு திட்டவட்டமானது ஆனால் சம்மந்தன் கேட்டபோது நிராகரிக்க முடியாதுள்ளது சந்திப்போம் பேசுவோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு