வியாஸ்காந்தின் பொறுப்பான பந்துவீச்சு! -ஜெவ்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி-

ஆசிரியர் - Editor II
வியாஸ்காந்தின் பொறுப்பான பந்துவீச்சு! -ஜெவ்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி-

லங்க பிரிமியர் லீக் (LPL) 3ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ். 

ஜெவ்னா கிங்ஸ் - கோல் க்ளடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற லங்க பிரிமியர் லீக் தொடரின் ஆரம்பப் போட்டியில் 24 ஓட்டங்களால் ஜெவ்னா கிங்ஸ் வெற்றியீட்டியது.

ஷொயெப் மாலிக், துனித் வெல்லாலகே ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் பினுர பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் ஜெவ்னா கிங்ஸின் வெற்றிக்கு வழிவகுத்தன.

ஜெவ்னா கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் வியகாந்த் வியாஸ்காந்த் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு