சயனைட், தகடு, துப்பாக்கி ரவைகளுடன் 3 பேருடைய எலும்பு கூடுகள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
சயனைட், தகடு, துப்பாக்கி ரவைகளுடன் 3 பேருடைய எலும்பு கூடுகள் மீட்பு!

புதுக்குடியிருப்பு - குரவில் கிராமத்திலுள்ள தனியார் காணியிலிருந்து நேற்றைய தினம் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த காணி உரிமையாளர் தனது காணியினை பண்படுத்தும்போது கடந்த மாதம் 20 ஆம் திகதி அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று புதன்கிழமை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான், தடையவியல் பொலிஸார் ஆகியோராால் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள், விடுதலைப்புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு