தனுஷ்கவின் கையில் லொகேசன் டிராக்கர்!! -நிபந்தனை விதித்த அவுஸ்ரேலிய நீதிமன்றம்-

ஆசிரியர் - Editor II
தனுஷ்கவின் கையில் லொகேசன் டிராக்கர்!! -நிபந்தனை விதித்த அவுஸ்ரேலிய நீதிமன்றம்-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு கையில் பொருத்தப்பட்டுள்ள லொகேசன் டிராக்கரை எந்த காரணம் கொண்டும் அகற்றக் கூடாது என்று அவுஸ்ரேலியா நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தனுஷ்க குணதிலகாவுக்கு பிணை வழங்கி அவுஸ்ரேலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு 1,50,000 டொலர் ஜாமீன் வழங்குவதற்கும் அவர் நாட்டை விட்டு வெளியேறாததை உறுதிசெய்வதற்காக கண்காணிப்பு வளையம் அணிவதற்கும் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்லக்கூடாது. அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு