நள்ளிரவு 12 மணிக்கு வீட்டாருக்கு தொியாமல் இளைஞனுடன் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோகம்! இளைஞன் கைது, முன்பும் ஒரு சம்பவம் நடந்ததால் சிறுமி நன்னடத்தை பிரிவில்...

ஆசிரியர் - Editor I
நள்ளிரவு 12 மணிக்கு வீட்டாருக்கு தொியாமல் இளைஞனுடன் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோகம்! இளைஞன் கைது, முன்பும் ஒரு சம்பவம் நடந்ததால் சிறுமி நன்னடத்தை பிரிவில்...

தொலைபேசி மூலம் பேசி 21 வயது இளைஞனை காதலித்துவந்த 15 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் காதலனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காதலன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

சிறுமியின் தாய், தந்தை வேலை நிமித்தமாக பண்ணையொன்றில் தங்கியிருந்துள்ளனர். இதனால் சிறுமி மட்டக்களப்பு நகரில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த  ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சிறுமி தனியாக சென்றுள்ளார்.

அப்போது இளைஞரொருவர் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டுச் சென்றதையடுத்து, அந்த இளைஞருடன் சிறுமி தொடர்புகொண்டுள்ளார்.

பிறகு அந்த இளைஞர் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு சிறுமியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து, சிறுமியை வெளியே செல்ல அழைத்துள்ளார். 

சிறுமியும் வீட்டிலிருந்து இளைஞருடன் சென்றிருந்த நிலையில் சிறுமியை தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சிறுமியின் தந்தை கடந்த 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமி வீட்டில் இல்லை என்பதை அறிந்துகொண்ட தந்தை, வீட்டுக்குள் மறைவாக இருந்து, 

மோட்டார் சைக்கிளில் இளைஞருடன் மகள் வந்திறங்குவதை அவதானித்துள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை இளைஞரை மடக்கிப் பிடித்து தாக்கியதையடுத்து, 

இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இதற்கு முன்னர் குறித்த சிறுமியை ஆணொருவர் காரில் ஏற்றிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் சிறுமி சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டு, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு