உதவித் திட்டங்களை பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor I
உதவித் திட்டங்களை பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாங்கள் உள்பட வெவ்வெறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்தோர் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களை பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்ததாவது:

1990ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்ந்துள்ள மக்களுக்கும் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கும் வீட்டுத் திட்டம் மற்றும் உதவிப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

அதற்கான பதிவுகளை கடந்த மே 31ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த கால எல்லை வரும் 30ஆம் திகதிவரை ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கியிருக்கும் பகுதி கிராம அலுவலகர் ஊடாக அந்த அந்தப் பிரதேச செயலகங்களில் தமது பதிவுகளை முன்னெடுக்க முடியும்  - என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு