யாழ்.பல்கலைகழக மாணவி உட்பட வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவி உட்பட வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம் வெளியானது..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் யாழ்.பல்கலைகழக மாணவி மற்றும் பேருந்து சாரதி உட்பட 3 பேரே உயிரிழந்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலம்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அஜாகரி (வயது 23). சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32).

பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியே 3 பேரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்ததுடன், 4 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு