வடக்கில் இராணுவம் காணி பெறுவதாயின் வடமாகாணசபையின் ஒப்புதல் பெறவேண்டும்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் இராணுவம் காணி பெறுவதாயின் வடமாகாணசபையின் ஒப்புதல் பெறவேண்டும்..

வடமாகாணத்தில் இராணுவம் தமது தேவைக்கு காணிகளை பெறுவதாயின் வடமாகாணசபையின் ஒப்புதல் இல்லாமல் காணிகளை எடுக்க இயலாது. என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணை தலைவா்கள் தலமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இன்று நடைபெற்றிருந்தபோதே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இக் கூட்டத்தின் போது வேலணைப் பிரதேச செயலர பிரிவிற்குட்பட்ட மண்டைதீவில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை படையினர் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் ஒருபுறம் காணிகளை விடுவித்து வருவது போன்ற தோற்றப்பாட்டை காட்டி வருகின்ற அரசாங்கம் மறுபுறம் காணிகளைச் சுவீகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றது.

இதற்கமையவே மண்டை தீவில் 18 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு படையினர் கணி சுவீகரிப்பதைக் கண்டிப்பதுடன் தொடர்ந்தும் இங்கு படையினர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்தனர்.

இதன் போது படையினருக்கு காணிகள் தேவை அதனை வழங்குங்கள் எனக் கொழும்பில் இருந்து அரச அதிபருக்கோ இல்லது பிரதேச செயலாளர்களுக்கோ அறிவுறுத்தல்கள் வந்தாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபையின் அனுமதியின்றி அதனை வழங்க முடியாது.

மேலும் படையினரோ அல்லது வேறு யாரோ காணி கேட்டால் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் மாகாண சபையின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மண்டை தீவுக் காணியை வழங்க முடியாதெனவும் வடக்கில் எங்காவது படையிருக்காக காணி அபகரிப்பது அல்லது சுவீகரிப்பதானால் மாகாண சபையின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டுமெனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு