யாழ்ப்பாணத்தில் சொந்த காணி இல்லாதவா்களுக்கு பளையில் காணி வழங்க திட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் சொந்த காணி இல்லாதவா்களுக்கு பளையில் காணி வழங்க திட்டம்..

யாழ்.மாவட்டத்தில் சொந்தமாக காணி இல்லாத மக்களுக்கு கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் காணிகளை வழங்கி அவா்களை அங்கு குடியேற்றுவதற்கான திட்டம் ஒன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று முன் மொழியப்பட்டிருக்கின்றது. 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இதன்போதே மேற்படி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் படையினரால் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். இங்குள்ள மக்களுக்கே காணிகள் இல்லாத நிலை இருக்கின்ற போது படையினருக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியும்.

யாழ்.மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரம் பேருக்கு காணிகள் இல்லை. ஆகவே இவ்வாறு காணிகள் இல்லாதவர்களுக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பளையில் இருக்கின்ற காணிகளை வழங்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் யோசனையொன்றை முன்வைத்தார்.

இதன் போது யாழ்.மாவட்டத்தில் காணிப் பிரச்சனையை  தீர்ப்பதற்கு வடமாகாண சபையும், திணைக்களங்களும் மாங்குளத்திற்கு நகர வேண்டும். அவ்வாறு சென்றாலே காணிப் பிரச்சனைனயை தீர்க்க முடியும் என விவசாய அமைச்சர் சிவநேசன் குறிப்பிட்டார்.

இதன் போது குறிக்கிட்ட அமைச்சர் விஐயகலா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் சிறிதரன் ஆகியோர் பளையிலுள்ள இந்தக் காணிகள் குறித்து பகிரங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு வேறு யாரும் வர முன்னதாக இந்த மக்கள் சென்று குடியமர வேண்டுமென்று தெரிவித்தனர்.

ஆகவே யாழில் காணியில்லாதவர்கள் பளையிலுள்ள அந்தக் காணிகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் அதனை பெற விரும்புகின்றவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு