யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் மிக அத்தியாவசியமான சிகிச்சை பிரிவு 6 வருடங்களின் பின் திறக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் மிக அத்தியாவசியமான சிகிச்சை பிரிவு 6 வருடங்களின் பின் திறக்கப்பட்டது!

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தில் நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான மூன்று மாடிகளை கொண்ட கட்டடமே இவ்வாறு திறந்த வைக்கப்பட்டது. 

வடமாகாண பிரதமர் செயலாளர் எஸ்.எம். சமன்பந்துலசேன புதிய சிகிச்சை பிரிவினை திறந்து வைத்ததுள்ளார். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சி.குமரவேள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், 

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு