பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..!

பிரான்ஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து அண்மையில் திருணம் முடித்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தென்மராட்சி வரணி - இடைக்குறிச்சி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த ஆ.அருள்குமார் (வயது 34) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு விடுமுறை காலத்தில் வந்திருந்ததுடன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணமும் முடித்திருந்தார். 

இன்னும் சில நாட்களில் மீண்டும் பிரான்ஸ் செல்லவிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வரணி இடைக்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு