செல்லுபடியற்ற QR குறியீட்டுக்கு எரிபொருள் கேட்டு முகாமையாளர் மீது தாக்குதல்! கண்ணுக்குமுன் நடந்த சம்பவத்தை பார்த்து ரசித்த பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
செல்லுபடியற்ற QR குறியீட்டுக்கு எரிபொருள் கேட்டு முகாமையாளர் மீது தாக்குதல்! கண்ணுக்குமுன் நடந்த சம்பவத்தை பார்த்து ரசித்த பொலிஸார்..

செல்லுபடியற்ற கியூஆர் குறியீட்டிற்கு எரிபொருள் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தை பொலிஸார் கண் முன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறியுள்ளனர். 

குறித்த சம்பவம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில் முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்துள்ளார்.இந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் எரிபொருள் நிலையத்திற்குள் அத்துமீறி உள் நுழைந்து முகாமையாளரை தாக்க முயன்ற வரை இடை மறித்துள்ளார்.

இதன்போது முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்த கதிரைகளை தூக்கி வீசி விட்டுச்சென்றுள்ளனர். இச்சம்பவம் நடைபெறும் பொழுது புதுக்குடியிருப்பு பொலிசார் எரிபொருள் நிலையத்தில் கடமை புரிந்துள்ளனர். 

அதனையும் பொருட்படுத்தாது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த உதவி முகாமையாளர், தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு