இலவச ஆங்கில பாட வகுப்புக்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுடன் கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
இலவச ஆங்கில பாட வகுப்புக்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுடன் கலந்துரையாடல்..

இளைஞர் யுவதிகளிடையே ஆங்கில மொழி புலமையை விருத்தி செய்வதற்காக இந்து பொளத்த கலாச்சார பேரவையினால் இலவச ஆங்கில மொழி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆலோசனை கடந்த சனிக்கிழமை உள்ள பௌத்த இந்து பேரவையின் வடமாகாண தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக இலவச ஆங்கில பாடநெறி யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களையும் இணைக்கும் வகையில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு இம்மாத நடுப்பகுதியில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் கலந்துகொண்டதுடன் ஆங்கிலபாட ஆசிரியர் ம.சுமெக்சன் கலந்து கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு