யாழ்.நகரில் 3 இடங்களில் சைக்கிள் திருட்டு! சந்தேகநபர்கள் தீவகம் - நாரந்தனையில் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் 3 இடங்களில் சைக்கிள் திருட்டு! சந்தேகநபர்கள் தீவகம் - நாரந்தனையில் கைது..

யாழ்.நகரில் 3 துவிச்சக்கர வண்டிகளை திருடிய இருவர் தீவகம் - நாரந்தனையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மத்திய பேருந்து நிலையம், யாழ்போதனாவைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் 

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 37 ,38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று சைக்கிள்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணை களுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு 

மீட்கப்பட்ட சைக்கிள்ளில் ஒரு சைக்கிளுக்கு மாத்திரம் சைக்கிள் தொலைத்தவர்களால் முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாகவும் 

ஏனைய சைக்கிளுக்கு முறைப்பாடு இல்லை எனதெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு