யாழ்.அரியாலை - பூம்புகாரிலுள்ள நண்பர் வீட்டில் நான்கரை பவுண் நகை திருடிய பருத்தித்துறையை சேர்ந்த நபர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - பூம்புகாரிலுள்ள நண்பர் வீட்டில் நான்கரை பவுண் நகை திருடிய பருத்தித்துறையை சேர்ந்த நபர் கைது!

நண்பரின் வீட்டில் நான்கரை பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதிக்கு பருத்தித்துறையிலிருந்து வந்திருந்த நபர் ஒருவர் தனது நண்பர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் பருத்தித்துறைக்கு சென்றிருக்கின்றார். 

இந்நிலையில் வீட்டிலிருந்து நான்கரை பவுண் தங்க நகைகள் காணாமல்போயுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் பருத்தித்துறை நகைக்கடை ஒன்றில் நான்கரை பவுண் நகை உருக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டில்

கடந்த புதன் கிழமை மேற்படி பருத்தித்துறையை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு