யாழ்.வடமராட்சி - தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு! அதிக கட்டண நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிப்பு! திகதியும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு! அதிக கட்டண நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிப்பு! திகதியும் அறிவிப்பு..

யாழ்.வடமராட்சி - தென்மராட்சி பகுதிகளில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். 

என வடமராட்சி - தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருந்தோர் அவற்றை செலுத்திவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப்பணம் 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்திற்கு மேலதிகமாக செலுத்தவேண்டும். எனவும் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு