பல லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாமல் அரசியல் செல்வாக்கால் துண்டித்த மின் இணைப்பை மீள இணைப்பு! யாழ்.சுன்னாகத்தில் நடந்த அரசியல் சண்டித்தனம்..

ஆசிரியர் - Editor I
பல லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாமல் அரசியல் செல்வாக்கால் துண்டித்த மின் இணைப்பை மீள இணைப்பு! யாழ்.சுன்னாகத்தில் நடந்த அரசியல் சண்டித்தனம்..

பல லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மின் இணைப்பு மின்சாரசபையினால் துண்டிக்கப்பட்டு சில நிமிடங்களில் நிலுவை கட்டணம் எதுவும் செலுத்தாதபோதும் கழற்றியவர்களே வந்து கொழுவிவிட்டுச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கின்றது. குறித்த எரிபொருள் நிரப்ப நிலையம் பல லட்சம் ரூபாய் மின்கட்ணத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்பட்டு நேற்றைய தினம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

எனினும் செலுத்தவேண்டிய மின் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட மீள செலுத்தாமலே துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்திலிருந்து மின்சாரசபைக்கு கடுமையாக அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாலேயே மின் இணைப்பு

மீளவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சில ஆயிரங்களில் இருந்தாலே மின் இணைப்பை துண்டிக்கும் மின்சார சபையினர் அரசியல்வாதிகள் இலட்ச கணக்கில் பணம் செலுத்த வேண்டியதாக உள்ள போதிலும் 

அவர்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் , தற்போது பெரும் தனியார் முதலாளிகள் , அரசியல்வாதிகளின் உறவினர்கள் மின் கட்டணம் செலுத்தாதபோதிலும் 

அவர்களுக்கும் மின் துண்டிப்பினை மேற்கொள்ளாது மின்சார சபை தவிர்ப்பது பலரும் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு