குளிர்சாதன பெட்டியிலிருந்து பொருள் ஒன்றை எடுக்க முயற்சித்த இளம் தாய் மின்சாரம் தாக்கி மரணம்!

ஆசிரியர் - Editor I
குளிர்சாதன பெட்டியிலிருந்து பொருள் ஒன்றை எடுக்க முயற்சித்த இளம் தாய் மின்சாரம் தாக்கி மரணம்!

குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருளை எடுப்பதற்கு முயற்சித்த இளம் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான அ.பஸ்மியா (வயது35) என்பவரே உயிரிழந்தார். 

தனது வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து பொருளை எடுப்பதற்காக கதவை திறந்தபோது குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் ஒழுங்கு காரணமாக

குறித்த பெண் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு