மயிலிட்டி - பருத்தித்துறை வீதியை பொதுமக்கள் பூரணமாக பயன்படுத்த அனுமதி! ஆளுநர் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
மயிலிட்டி - பருத்தித்துறை வீதியை பொதுமக்கள் பூரணமாக பயன்படுத்த அனுமதி! ஆளுநர் அறிவிப்பு...

யாழ்.பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் மக்கள் பாவனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த மயிலிட்டி தொடக்கம் பருத்தித்துறை வரையான பகுதி நாளை தொடக்கம் 24 மணித்தியாலங்களும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

குறித்த தகவலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வெளியிட்டுள்ளார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த குறித்த  வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை மட்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் யாழ்.மாவட்டப் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் குறித்த வீதியை 24 மணித்தியாலமும் திறந்து விடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு