கிளிநொச்சியில் வழிப்பறி செய்த நகையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் வழிப்பறி செய்த நகையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க சங்கலி ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் நகைக்கடை உரிமையாளரின் சமர்த்தியத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்றைய தினம் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்றிருந்த இருவர் நகை ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பாக இரகசியமாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறத்த இருவரும் கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கலியை வழிப்பறி செய்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு வழிப்பறி செய்யப்பட்ட நகையை விற்பனை செய்ய வந்ததும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை மீட்டுள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு