வடமாகாண சுற்றுலாத்துறையும் - தமிழக சுற்றுலாத்துறையும் இணைந்து பணியாற்றகூடிய பொறிமுறை ஒன்றை அமைக்க ஆளுநர் திட்டம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண சுற்றுலாத்துறையும் - தமிழக சுற்றுலாத்துறையும் இணைந்து பணியாற்றகூடிய பொறிமுறை ஒன்றை அமைக்க ஆளுநர் திட்டம்!

வடமாகாண சுற்றுலாதுறையும் - தமிழ்நாட்டு சுற்றுலாதுறையும் இணைந்து செயற்படும் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திட்டங்களை வகுத்து வருகிறார்.

யாழ்ப்பாணம சர்வதேச விமான நிலையதின் ஊடாக தமிழ்நாட்டையும் வடமாகாணத்தையும் இணைத்து குறித்த சுற்றுலாத்துறை இணைந்து செயற்படும் வகையலான பொறிமுறை ஒன்றை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வடமாகாணத்திலிருந்து இருந்து தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களை தரிசிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து வடக்கின் சுற்றுலா மையங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் சுற்றுலா மையங்களுக்கு சென்றுவரவும்

உதவும் வகையிலான பொறிமுறை ஒன்றை அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் 

தமிழ்நாட்டின் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு