மோட்டார் சைக்கிளும் - கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து! இளம் குடும்பஸ்த்தர் பலி..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளும் - கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து! இளம் குடும்பஸ்த்தர் பலி..

மோட்டார் சைக்கிளும்  கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து நேற்றிரவு 10 மணியளவில் கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், கப் வாகனத்தின் சாரதியை கைது செய்து, இன்று நீதிமன்றில் முன்னிறுத்தினர்.

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு