யாழ்.பலாலியில் நல்லிணக்க மையம், இராணுவ தளபதி விக்கும் லியனகே இன்று திறந்துவைத்தார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலியில் நல்லிணக்க மையம், இராணுவ தளபதி விக்கும் லியனகே இன்று திறந்துவைத்தார்!

யாழ்.பலாலி சந்தியில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையத்தினை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இன்று திறந்துவைத்துள்ளார். 

யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர இராணுவ தளபதியினை வரவேற்றார். " நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக 

ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக பதவியேற்ற இலங்கை ராணுவ தளபதியின் யாழ் மாவட்ட முதல் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ராணுவ தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிகழ்வுகளில் இன்று கலந்து கொள்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு