நல்லுார் ஆலயத்திற்குள் திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலய சுற்றாடலில் உள்ள புடவைக்கடை ஒன்றில் உடுப்பு வாங்கிய திருடனை மடக்கிய பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
நல்லுார் ஆலயத்திற்குள் திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலய சுற்றாடலில் உள்ள புடவைக்கடை ஒன்றில் உடுப்பு வாங்கிய திருடனை மடக்கிய பொலிஸார்!

நல்லுார் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர் ஒருவரின் வங்கி அட்டையை திருடி அதனைப் பயன்படுத்தி ஆலய சுற்றாடலில் உள்ள புடவைக்கடை ஒன்றில் உடுப்ப வாங்கிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிமாவட்டத்தை சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், 

ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் ஆலயத்துக்குள் கடமையிலிருந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பக்தர்களிடம் நூதனமாக திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்த போதே குறித்த நபர் இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிசார் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்த நிலையில் யாழ்.பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு