நீராடிக் கொண்டிருந்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்கள்! துரிதமாக செயற்பட்டு இருவரையும் மீட்ட பொலிஸ் மற்றும் கடற்படை..

ஆசிரியர் - Editor I
நீராடிக் கொண்டிருந்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்கள்! துரிதமாக செயற்பட்டு இருவரையும் மீட்ட பொலிஸ் மற்றும் கடற்படை..

நிலாவெளி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரு இளம் பெண்களை உயிர்காப்பு பணியில் இருந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் மீட்டிருக்கின்றனர். 

குடும்பத்தாரோடு சுற்றுலா வந்த அனுராதபுரம் சியம்பலகஹாகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதிகளே கடலில் நீராடும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

சுமார் 150 மீற்றர் தூரம் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்கள் இருவரையும் பொலிசாரும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்பு பிரிவினரும் கரைக்குக் கொண்டு வந்து முதலுதவி அளித்து குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு