வீடு திரும்பிக் கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளரை கடத்தி அடித்து சித்திரவதை செய்து அவரை கொண்டே நகைக்கடையை திறந்து 10 பவுண் நகை கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
வீடு திரும்பிக் கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளரை கடத்தி அடித்து சித்திரவதை செய்து அவரை கொண்டே நகைக்கடையை திறந்து 10 பவுண் நகை கொள்ளை..!

நகைக்கடை வியாபாரியை வாகனம் ஒன்றில் கடத்தி அவரை கொண்டே நகை்கடையை திறந்த கொள்ளை கும்பல் சுமார் 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இரவு 1 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் வர்த்தகர் தனது கடையை பூட்டிவிட்டு நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்தபோது 

பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரை நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, 

காயமடைந்த வர்த்தகரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு