தமது மோட்டார் சைக்கிள்களுக்கு புள் டாங் பெற்றோல் கேட்டு அடம்பிடித்த பொலிஸார்! 2 ஆயிரம் ரூபாவுக்கு பெற்றோல் கொடுத்த எரிபொருள் நிரப்பு நிலையம்..

ஆசிரியர் - Editor I
தமது மோட்டார் சைக்கிள்களுக்கு புள் டாங் பெற்றோல் கேட்டு அடம்பிடித்த பொலிஸார்! 2 ஆயிரம் ரூபாவுக்கு பெற்றோல் கொடுத்த எரிபொருள் நிரப்பு நிலையம்..

பொலிஸார் தமது மோட்டார் சைக்கிள்களுக்கு புள் டாங் பெற்றோல் கோரிய நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கண்காணிப்பு உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தவர்களின் எதிர்ப்பினால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் முழங்காவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அதிகாரியின் கோரிக்கை கடிதத்துடன் பொலிஸார் எரிபொருள் நிரப்புவதற்கு முயற்சி எடுத்திருக்கின்றனர். 

ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கண்காணிப்பு உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்ததுடன், சாதாரண மக்களைபோன்று 2 ஆயிரம் ரூபாவுக்கு பெற்றோல் வழங்கினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு