தேங்காய் எண்ணெய் என நினைத்து பேன் மருந்தில் நுாடில்ஸ் தயாரித்த சமையல் அம்மா! 11 சிறுவர்கள் வைத்தியசாலையில், பொலிஸார் தீவிர விசாரணை, இலங்கையில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தேங்காய் எண்ணெய் என நினைத்து பேன் மருந்தில் நுாடில்ஸ் தயாரித்த சமையல் அம்மா! 11 சிறுவர்கள் வைத்தியசாலையில், பொலிஸார் தீவிர விசாரணை, இலங்கையில் நடந்த சம்பவம்..

கோப்பு படம்

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பேன் மருந்தை கலந்து நுாடில்ஸ் செய்து கொடுக்கப்பட்டதால் 11 பாடசாலை சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் திருகோணமலை - பாலையூற்ற பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தலைக்கு வைக்கும் பேன் மருந்தை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சமையலறையில் வைத்திருந்த நிலையில் நேற்று காலை அந்த எண்ணெய்யை தேங்காய் எண்ணெய் என நினைத்து 

தாயார் நூடில்ஸ் தயாரித்து காலை உணவாக சிறார்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் மயக்கமடைந்த சிறார்கள் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு