யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்கலைக்கழககத்தின் மத்தியில் உள்ள அலங்கார சுற்று வட்டத்தில் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ.விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உட்பட பலா் சுடர்களை ஏந்தியவாறு, நினைவேந்தல் கீதம் இசைக்க அஞ்சலி செய்தனர்.

தொடர்ந்து மலரஞ்வலி செய்ததோடு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.










பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு