இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான மக்களை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்ற எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான மக்களை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்ற எம்.ஏ.சுமந்திரன்..

விசுவமடு - நாதன் திட்டக்குடியிருப்பில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்களை சந்திப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்களை நோில் சந்தித்த சுமந்திரன் அவர்களுக்கு சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார். 

குறித்த சம்பவம் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு