1800 லீற்றர் எரிபொருளை பதுக்கிவைத்திருந்த ஒருவர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது..! வடமாகாணத்தில்...

ஆசிரியர் - Editor I
1800 லீற்றர் எரிபொருளை பதுக்கிவைத்திருந்த ஒருவர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது..! வடமாகாணத்தில்...

கிளிநொச்சி - கரடிப்போக்கு பகுதியில் 950 லீற்றர் மண்ணெணெய் மற்றும் 850 லீற்றர் டீசல் ஆகியவற்றை பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதுக்கிவைக்கப்பட்டிருந்த எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு பிரிவின்  பொலிஸ்  அத்தியட்சகர் மெதவலவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்றைய தினம்  02.07.2022 சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

 இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் மெதவல  தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு