சாமி அறையில் விளக்கேற்றிய குடும்ப பெண் தீ விபத்தில் பலி..! சாமி அறையில் சேமித்து வைத்திருந்த எரிபொருளே காரணம் - பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
சாமி அறையில் விளக்கேற்றிய குடும்ப பெண் தீ விபத்தில் பலி..! சாமி அறையில் சேமித்து வைத்திருந்த எரிபொருளே காரணம் - பொலிஸார்..

திருகோணமலை - உப்புவெளி பகுதியில் வீடொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்ரோல் மீது தீ பற்றியதால் குடும்ப பெண் ஒருவர் உடல்கருகி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ரவீந்திரன் சுதாசினி (47வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நேற்று (29) பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே வீசிய போது அந்த அறைக்குள் இருந்த பெற்றோல் போத்தல் மீது விழுந்தமையால் தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அரை போத்தல் பெற்றோல் மட்டுமே பூஜை அறைக்குள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு