வடமாகாண உள்ளக கணக்காய்வு பிரிவின் பிரதம கணக்காய்வாளருக்கு இடமாற்றம்..! ஆளுநர் அதிரடி நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண உள்ளக கணக்காய்வு பிரிவின் பிரதம கணக்காய்வாளருக்கு இடமாற்றம்..! ஆளுநர் அதிரடி நடவடிக்கை..

வடமாகாண உள்ளக பிரதம கணக்காய்வாளராக கடமையாற்றிய திருமதி சுரேஜினி வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். 

வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராஜா இதற்கான அறிவுறுத்தலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. வடமாகாண அமைச்சுக்களில் இடம்பெற்ற நிதி நிர்வாக மோசடிகள் , 

மந்திகை ஆதார வைத்தியசாலைகளில் இடம்பெற்ற நிதி முறைகேடு மற்றும் யாழ்.மாநகர சபை உத்தியோகஸ்த்தரால் மேற்கொள்ளப்பட்ட பல லட்சம் ரூபாய் மோசடி தொடர்பில் இடமாற்ற கணக்காய்வுகள் குறித்தும்,

அவற்றிலுள்ள வழுவல், நழுவல் போக்குகள் குறித்தும் ஆளுநருக்கு முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே குறித்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு