அண்ணனும், தம்பியும் துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொலை..! சந்தேகநபர்கள் காட்டுக்குள் தலைமறைவு, 3 பேர் கூலிப்படையை சேர்ந்தோராம், பாதுகாப்பு பணியில் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
அண்ணனும், தம்பியும் துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொலை..! சந்தேகநபர்கள் காட்டுக்குள் தலைமறைவு, 3 பேர் கூலிப்படையை சேர்ந்தோராம், பாதுகாப்பு பணியில் இராணுவம்..

மன்னார் - நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் கடந்த 10ம் திகதி துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் காட்டுக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

மேலும் குறித்த கொலை கும்பலுக்குள் வெளிமாவட்டத்தை சேர்ந்த 3 பேர் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் இந்த கொலைக்காக அழைத்துவரப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம். எனவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, படுகொலை சம்பவத்தில் நொச்சிக் குளத்தைச் சேர்ந்த 16 ஆண்கள் நேரடியாக தொடர்புபட்ட நிலையில் அவர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் 

அவர்களை விரைவில் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கொலைக் கும்பலுக்குள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் பங்கேற்றுள்ளமை குறித்து பொலிஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், குறித்த மூவரும் மேற்படி கொலைகளை மேற்கொள்வதற்காகவே 

வேறு மாவட்டத்தில் இருந்து நொச்சிக்குளத்திற்கு அழைத்துவரப்பட்டு இருக்கலாம், என புலன் விசாரணையில் தெரியவருவதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

நொச்சிக்குளம் படுகொலையுடன் சம்மந்தப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தற்பொழுது அக்கிராமத்தில் இருந்து தலைமறைவாகி, உறவினர்களின் வீடுகள் 

மற்றும் காட்டுப்பகுதிகளில் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் பொலிஸாரும் இவர்களின் மறைவிடம் குறித்து விசாரணை செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களும், உறவினர்களும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த படுகொலை சம்பவத்திற்கு பிரதான காரணமாக கடந்த நான்காம் திகதி உயிலங்குளத்தில் நடந்த மாட்டு வண்டிச்சாவரியே இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் 

குறித்த கொலைக்கு முக்கிய காரணம் உயிலங்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும், நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் ஒரு ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலவும் பகமையே என நொச்சிக்குளம் அயல் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதே சமயம் கடந்த வெள்ளி காலை நொச்சிக்குளம் பகுதியில் நிகழ்ந்த குறித்த இரட்டைக்கொலை சம்பவம் மன்னார் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நொச்சிக்குளம் கிராமத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு