துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட அண்ணனும், தம்பியும்..! 16 சந்தேகநபர்களும் தலைமறைவு, தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட அண்ணனும், தம்பியும்..! 16 சந்தேகநபர்களும் தலைமறைவு, தீவிர விசாரணையில் பொலிஸார்..

மன்னார் - நொச்சிக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேர் தலைமறைவாகியுள்ளதாக பொலஸார் கூறியிருக்கின்றனர். 

இதேவேளை கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை (11) காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு