யாழ்.நகரை அண்மித்த கோவில் வீதியில் பூட்டியிருந்த துவிச்சக்கர வண்டி திருட்டு! மாவட்டத்தில் அதிகரிக்கும் சைக்கிள் திருட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்மித்த கோவில் வீதியில் பூட்டியிருந்த துவிச்சக்கர வண்டி திருட்டு! மாவட்டத்தில் அதிகரிக்கும் சைக்கிள் திருட்டு..

யாழ்.நகரை அண்மித்த கோவில் வீதியில் கடை ஒன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பெண் ஒருவருடைய துவிச்சக்கர வண்டி திருடிச் செல்லப்பட்டிருக்கின்றது. 

சைக்கிள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் இரு இளைஞர்களால் இவ்வாறு திருடப்பட்டுள்ளது. ஆசிரியையாகக் கடமையாற்றும் சைக்கிளின் உரிமையாளரான பெண்மணி, 

இது குறித்த சிசிடிவி காணொளியை சமூக வலைத்தளமொன்றில் வெளியிட்டுள்ளார். துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சுமார் 40 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரை தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறான திருட்டுகளால் போக்குவரத்துக்கு என்ன செய்வது என்ற அங்கலாய்ப்பில் குறித்த பெண் விசனம் வெளியிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு