யாழ்.நெடுந்தீவு கடலில் கடற்படையினர் அதிரடி..! பொதியை வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடலில் கடற்படையினர் அதிரடி..! பொதியை வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 35 போத்தல் பூச்சிகொல்லி மருந்து இன்று வியாழக்கிழமை கடற்படையினரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மிதந்து வருவதை அவதானித்த கடற்படையினர் அதனை மீட்டு சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் இந்தியாவிலிருந்து குறித்த பூச்சிக்கொல்லி மருந்துகளை கடத்திய நிலையில் 

கடற்படையினரை கண்டதும் பூச்சிக்கொல்லி மருந்து பையை கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம். என்ற கோணத்தில் கடற்படையினர் தொடர்ந்து விசாரணைய மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு