நிறைபோதையின் வந்த தந்தை 5 வயது மகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! கை முறிந்த நிலையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
நிறைபோதையின் வந்த தந்தை 5 வயது மகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! கை முறிந்த நிலையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை 5 வயது மகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த சம்பவம் கொடிகாமம் கெற்பேலி மேற்கு மிருசுவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத சமயம் நிறைபோதையில் வீட்டுக்குவந்த தந்தை 5 வயதான சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். 

தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுமி கை முறிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு