அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி-20 தொடர்!! -இலங்கை அணிக்கான குழாம் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி-20 தொடர்!! -இலங்கை அணிக்கான குழாம் அறிவிப்பு-

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி-20 தொடரை முன்னிட்டு சிறந்த வீரர்களைக் கொண்ட  இலங்கை கிரிக்கெட் குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் மிகத் திறமையாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க டி சில்வா (26 விக்கெட்கள்), மஹீஷ் தீக்ஷன (12), துஷ்மன்த சமீர (9), துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பானுக்க ராஜபக்ஷ (206 ஓட்டங்கள்) ஆகியோர் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். 

மேலும் 'லிட்ல் மாலிங்க' என அழைக்கப்படும் மதீஷ பத்திரனவும் குழாத்தில் இடம்பெறுகிறார். ரி-20 அணிக்கு வழமைபோல் தசுன் ஷானக்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சகலதுறை வீரர்கள் பலர் இடம்பெறுகின்றனர்.

அக் குழுhமின் முழு விபரங்கள் வருமாறு:- 

தசுன் ஷானக்க (அணித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, நுவனிது பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, வனிந்து ஹசரங்க, சமில கருணாரட்ன, துஷ்மன் சமீர, கசுன் ராஜித்த, நுவன் துஷார, மதீஷ பத்திரன, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, ப்ரவீன் ஜயவிக்ரம, லக்ஷான் சந்தகேன்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு