யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொருட்கள்..! சம்பிரதாயபூர்வ விநியோக பணிகளை ஆரம்பித்த இந்திய துணை துாதுவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொருட்கள்..! சம்பிரதாயபூர்வ விநியோக பணிகளை ஆரம்பித்த இந்திய துணை துாதுவர்..

தமிழக மக்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட நிவாரண பொதிகள் இன்று காலை யாழ்.மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நிவாரண பொதிகளை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பொறுப்பேற்று சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்.புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. 

யாழ்.இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு