யாழ்.சிறுப்பிட்டியில் நடந்த கோர விபத்து..! நல்லுார் - நாயன்மார்கட்டு இளைஞன் பலி, மேலும் ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் நடந்த கோர விபத்து..! நல்லுார் - நாயன்மார்கட்டு இளைஞன் பலி, மேலும் ஒருவர் படுகாயம்..

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ் தரிப்பிடம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இன்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் நல்லூர் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

நல்லூர் பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இரட்ணசீலன் சுஜீவன் (வயது 24) என்பவர் படுகாயமயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வேகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 

வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த பஸ் தரிப்பு நிலைய சுவருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு