கட்டுப்பாடற்ற வேகம் சிறுவனை மோதி தள்ளி இழுத்து சென்ற மோட்டார் சைக்கிள்..! படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் சிறுவனை மோதி தள்ளி இழுத்து சென்ற மோட்டார் சைக்கிள்..! படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கட்டுப்பாடற்ற வேகத்தினால் 7 வயது சிறுவனை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள், சிறிது துாரம் சிறுவனை இழுத்துச் சென்ற சம்பவம் மன்னார் பிரதான வீதியில் சிறுவர் பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று (22) காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்ற நிலையில் குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் 

குறித்த சிறுவனை மோதியதோடு, சிறிது தூரம் மோட்டார் சைக்கிலில் குறித்த சிறுவன் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அப்பகுதியால் சென்றவர்கள் சிறுவனை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் படுகாயம் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் குறித்த விபத்து தொடர்பாகவும், 

விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும்,பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு