இரணைதீவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்..

ஆசிரியர் - Editor I
இரணைதீவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்..

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இரணைதீவில் தாமகவே குடியேறியுள்ள இரணைதீவு மக்களை சந்தித்து கலந் துரையாடியுள்ளார்.

போர் காரணமாக இரணைதீவிலிருந்து இ டம்பெயரந்த மக்கள் மீளவும் தமது சொந்த நிலத்திற்கு திரும்பி செல்ல முடிதளவுக்கு இரணைதீவை கடற்படையினர் தமது கட்டு ப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மக்க ள் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி போராட்டம் நடத்திவந்தனர். இதனை தொடர்ந்து அரசாங்கம் மேற்படி காணிக ளை விடுவிப்பதாக உத்தரவாதம் வழங்கி யது.

ஆனாலும் வழங்கிய உத்தரவாதம் வழங்கி யது போல் மக்களின் காணிகள் எவையும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் அ ண்மையில் இரணைதீவு மக்கள் தாமாக இரணைதீவில் குடியேறினர்.

இவ்வாறு குடியேறிய மக்களை பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தித்துவரும் நிலை யில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக் னேஷ்வரனும் மக்களை சந்தித்து குறைக ள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். 





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு