SuperTopAds

முள்ளிவாய்க்கால் இழுபறிகள் நீடிப்பு!

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் இழுபறிகள் நீடிப்பு!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பாக இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், வடக்கு மாகாண சபையினரும், பல்கலைக்கழக மாணவர்களும் சந்தித்துப் பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வழமைபோன்று வடக்கு மாகாண சபையை இம்முறையும் நடத்தும் என்றும் கள ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

வடக்கு மாகாண சபை­யி­ன­ருக்­கும், யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற பேச்­சுக்­க­ளில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இதனடிப்படையில் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் இன்று மீண்­டும் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்றது. அதில் பல்கலைக்கழக டாணவர்கள் பங்குபற்றவில்லை.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபை முன்­னெ­டுத்து வந்த நிலை­யில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தாம் அதனை முன்­னெ­டுக்­கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­த­னர். இத­னால் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது.இந்த நிலை­யில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று சந்­திப்பு நடை­பெற்­றது.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தொடர்­பில் தாம் தயா­ரித்­துள்ள நிகழ்சி நிரலை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்து இறுதி வரை­யில் கூட்­டத்­தில் வற்­பு­றுத்­தி­யுள்­ள­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அதனை ஏற்­றுக் கொள்­ள­வில்லை. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் இவ்­வாறு செயற்­ப­டு­வது, தங்­க­ளின் நிகழ்சி நிர­லில் நாங்­கள் செயற்­பட வேண்­டும் என்­ப­தைப் போல் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

வடக்கு மாகாண சபை முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லுக்­காக குழு அமைத்­துள்­ள­து­டன், அது ஒரு நிகழ்சி நிர­லை­யும் தயா­ரித்­துள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று குறிப்­பிட்­டுள்­ளார். இத­னால் இரண்டு தரப்­பி­னர் இடை­யே­யும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில், வடக்கு மாகாண சபை­யின் நினை­வேந்­தல் குழு­வின் கூட்­டம் இன்று நடை­பெ­ற்றது. கூட்­டத்­தில் நினை­வேந்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய பொறுப்­புக்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட்டதாக கூறப்படுகிறது.