பொலிஸ் தடுப்பு வேலிகளில் ஆண்கள், பெண்களின் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி நூதன போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் தடுப்பு வேலிகளில் ஆண்கள், பெண்களின் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி நூதன போராட்டம்..!

அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு அருகில் பொலிஸ் வீதி தடைகளின் முன்னால் ஆண், பெண் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகக்கோரி பல்வேறு அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணக் கோரி பல்வேறு அமைப்புகளும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், 

அதற்கு ஆதரவாக தற்போது நூதனமான முறையில் உள்ளாடைப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு