பொலிஸ் சுற்றிவளைப்பில் இரு பெண்கள் கைது..! வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் பொலிஸார் அதிரடி...

ஆசிரியர் - Editor I
பொலிஸ் சுற்றிவளைப்பில் இரு பெண்கள் கைது..! வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் பொலிஸார் அதிரடி...

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேவை பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் பிறைந்துறைச்சேனையில் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண் ஒருவரை 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டபோது, 

ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு