யாழ்.நீர்வேலியை சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம், நேற்று மட்டும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்...!

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியை சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம், நேற்று மட்டும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்...!

யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த 5 பேர் மன்னார் பேசாலை பகுதி வழியாக இராமேஸ்வரம் - சேராங்கோட்டை பகுதியை சென்றடைந்துள்ளனர். 

மேலும் மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்துள்ளனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் , உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாகவும் இலங்கையில் தம்மால் வாழ முடியாத நிலையிலையே இந்தியாவிற்கு வந்துள்ளதாக விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்னர். 

நேற்றைய தினம் சென்ற 18 பேரையும் விசாரணைகளுக்கு உட்படுத்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மண்டபம் முகாமில் ஒப்படைத்துள்ளனர். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையில் வாழ முடியவில்லை. 

என கூறி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் 60 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக சென்று தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு