யாழ்.மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்ட முதிரை மர குற்றிகள்..! காத்திருந்து பிடித்த பொலிஸ் புலனாய்வு பிரிவு, மானிப்பாயை சேர்ந்தவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்ட முதிரை மர குற்றிகள்..! காத்திருந்து பிடித்த பொலிஸ் புலனாய்வு பிரிவு, மானிப்பாயை சேர்ந்தவர் கைது...

சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட முதிரை மர குற்றிகளை கைப்பற்றியுள்ள யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மரம் கடத்திவந்த ஒருவரை கைது செய்துள்ளனர். 

முதிரை மரக்குற்றிகள் நூதனமான முறையில் கடத்தப்படுவதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து, 

கைதடியில் வைத்து சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றினை சோதனையிட்டபோது  சுமார் 4 லட்சம் பெறுமதிவாய்ந்த 

8 முதிரை மரக்குத்திகள் கண்டுபிடித்ததுடன், சந்தேகத்தின் பெயரில் மானிப்பாயை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு