கனடாவில் இருந்து பணம் கொடுத்து வாள்வெட்டு குழுக்களை ஏவி தாக்குதல், கொலை அச்சுறுத்தல்..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
கனடாவில் இருந்து பணம் கொடுத்து வாள்வெட்டு குழுக்களை ஏவி தாக்குதல், கொலை அச்சுறுத்தல்..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்...

கனடாவில் இருந்து வாள்வெட்டு குழு ஒன்றுக்கு பணம் கொடுத்து யாழ்.சுன்னாகம் - புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதும், வீட்டின் உரிமையாளர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொருக்கியத்துடன், 

வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேவேளை , வீட்டின் உரிமையாளருடன் கனடாவில் உள்ள நபர் ஒருவர் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், 

அவரது தூண்டுதலில் யாழில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சுண்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு